ஓ.பன்னீர்செல்வம் தனக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கக்கோரி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். அவருடைய ஆதரவு எம்.பி.க்கள் ராஜ்நாத்சிங்கிடம் நேரில் கடிதத்தை வழங்கினர்.
நிர்மலா பெரியசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். அப்போது, தான் மனநிறைவுடன் வந்திருப்பதாக கூறினார்.
10 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
பட்ஜெட்டை ஜெயலலிதா சமாதிக்கு எடுத்துச்சென்றது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார்–மு.க.ஸ்டாலின் இடையே சட்டசபையில் நேற்று காரசார வாக்குவாதம் நடந்தது. இதனால் சட்டசபையில் கடும் அமளியும் ஏற்பட்டது.
மார்ச் 22, 05:45 AM
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க வேண்டும். மரணம் அடைந்ததால் அவரை விடுவித்தது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கக்கோரும் மனுவில் சசிகலா கையெழுத்திட தடைவிதிக்க வேண்டும் என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி வழக்கில் ஜூலை 11–ந் தேதி முதல் இறுதி விசாரணை நடைபெறும் என்றும், தமிழகத்துக்கு கர்நாடகம் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.