ரூ.75 லட்சம் கேட்டு நடிகையை மிரட்டியதாக முன்னாள் காதலன் ஓப்புதல்


ரூ.75 லட்சம் கேட்டு நடிகையை மிரட்டியதாக முன்னாள் காதலன் ஓப்புதல்
x
தினத்தந்தி 26 July 2017 8:39 AM GMT (Updated: 26 July 2017 8:39 AM GMT)

75 லட்ச ரூபாய் கேட்டு தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மலையாள நடிகையை மிரட்டியதை அவரது முன்னாள் காதலன் ஒப்புக்கொண்டுள்ளார்.

திருவனந்தபுரம்

மலையாள நடிகை  மைதிலி, இவர் படத்தயாரிப்பு நிர்வாகியான  கிரண்குமார்   என்பவரை காதலித்து வந்துள்ளார். கிரண்குமார் ஏற்கெனவே திருமணம்  ஆனவர் என்பதை தெரிந்து கொண்ட மைதிலி, கிரண்குமாருடன் இருந்த தொடர்பை முறித்துக்  கொண்டார்.

இந்நிலையில்,  கடந்த 2008ம் ஆண்டு முதல் மைதிலி தன்னுடன் நெருக்கமாக  இருந்த புகைப்படங்களை வெளியிடப்போவதாக கிரண்குமார் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.  இதனை மைதிலி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் ரூ.75 லட்சம் பணத்தை கொடுக்காவிட்டால்  தன்னுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என  கிரண்குமார் மீண்டும் மிரட்டியுள்ளார். சொன்னது போல் சில தினங்களுக்கு முன்  அந்தப் புகைப்படங்களை கிரண்குமார் வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த  மைதிலி கேரள காவல் துறையிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட  கிரண்குமார் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், ’மைதிலியிடம் ரூ.75 லட்சம் பணம்  கேட்டேன். அவர் கொடுக்க மறுத்ததால் என்னுடன் அவர் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை  வெளியிட்டேன்’ என கூறி உள்ளார்.

Next Story