ஆடையால் அவதி அடைந்த ஐஸ்வரயாராய்
ஆஸ்திரேலியாவில் இந்திய தேசியை கொடியை ஏற்றிய போது தனது ஆடை காரணமாக தர்மசங்கடமான நிலைக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் ஆளாகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார்.
அந்த விழாவில் இந்திய தேசிய கொடியை நடிகை ஐஸ்வர்யா ஏற்றினார். அப்போது லோ கட் நெக் வைத்த ஆடையால் அவர் சற்று தர்மசங்கடமான நிலைக்கு ஆளானார்.
புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும்போதும், அங்கிருப்பவர்களுடன் உரையாடும்போது தனது கை மற்றும் துப்பட்டாவை வைத்து கழுத்தினை மறைத்துக்கொண்டு சங்கடப்பட்டது தெளிவாக தெரிந்தது.
ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது தனது கையை வைத்து மறைத்தபடியே நின்றிருந்தார்.
மெல்போர்னில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய முதல் இந்திய நடிகை ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
பெருமைப்பட வேண்டிய நேரத்தில் அவர் இவ்வாறு தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகியுள்ளார்.
Related Tags :
Next Story