‘புலி உறுமுது’ முதல் ‘பட்டய கிளப்பு’ வரை..! - அனந்து
அதிரடியான பாடலாகட்டும், மென்மையான பாடலாகட்டும், எப்படிப்பட்ட பாடலாக இருந்தாலும் தனது குரல் வளத்தால் அந்த பாடலை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வல்லமை நிறைந்த பாடகர்களில் அனந்துவும் ஒருவர்.
விஜய்யின் ‘வேட்டைக்காரன்’ படத்தின் மூலம் “புலி உறுமுது....புலி உறுமுது...”என்ற பாடலை பாடி, ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர், இவர். ரஜினிகாந்தின் ‘கபாலி’ படத்தில் இடம் பெற்ற “மாய நதி...” என்ற பாடலை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பாடி பிரபலமானார்.
இவருக்கு மேலும் ஒரு திருப்புமுனையாக விஜய்யின் ‘பைரவா’ படத்தில் இடம் பெற்ற “பட்டய கெளப்பு...” பாடல் அமைந்துள்ளது.
இவருக்கு மேலும் ஒரு திருப்புமுனையாக விஜய்யின் ‘பைரவா’ படத்தில் இடம் பெற்ற “பட்டய கெளப்பு...” பாடல் அமைந்துள்ளது.
Next Story