சூரத்தேங்காய்


சூரத்தேங்காய்
x

மாருதி பிலிம்ஸ் இண்டர் நேஷனல் தயாரிக்கும் படத்துக்கு "சூரத்தேங்காய்" என பெயரிடப்பட்டுள்ளது. இதில் நாயகனாக குரு அரவிந்த் நடிக்கிறார். இவர் மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி படத்தில் நடித்தவர். நாயகியாக சாமந்தி அறிமுகமாகிறார், தேனி முருகன் காதல் காமாட்சி, ஜெயமணி, செல்வதுரை, அதிரவன், யு சக்திவேல் ஆகியோ

மாருதி பிலிம்ஸ் இண்டர் நேஷனல் தயாரிக்கும் படத்துக்கு "சூரத்தேங்காய்" என பெயரிடப்பட்டுள்ளது. இதில் நாயகனாக குரு அரவிந்த் நடிக்கிறார். இவர் மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி படத்தில் நடித்தவர். நாயகியாக சாமந்தி அறிமுகமாகிறார், தேனி முருகன் காதல் காமாட்சி, ஜெயமணி, செல்வதுரை, அதிரவன், யு சக்திவேல் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி சஞ்சீவ் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். இவர் பிரபு தேவா, லாரன்ஸ் போன்றோரிடம் நடன உதவியாளராக பணியாற்றியவர்.

பதவி, பேராசை, சொத்து, சுகம், போதை போன்றவை இன்றைய இளைஞர்களை ஆட்டி படைக்கிறது. இதனால் இவர்களது வாழ்க்கைபாதை துன்பம் துயரங்களோடு வெவ்வேறு விதமாக மாறி எந்த நிலைக்கு ஆளாகிறார்கள் என்பதே கதை என்றார் இயக்குனர்.

ஒளிப்பதிவு: ஹார்முக், இசை: மகேஷ் பஞ்சநாதன், பாடல்: நலங்கிள்ளி வசனம்:தயாரிப்பு: சக்தி.


Next Story