மொபட் மீது கன்டெய்னர் லாரி மோதி பெண் பலி


மொபட் மீது கன்டெய்னர் லாரி மோதி பெண் பலி
x
தினத்தந்தி 18 Feb 2017 9:41 PM GMT (Updated: 18 Feb 2017 9:41 PM GMT)

பூந்தமல்லியில் மொபட் மீது கன்டெய்னர் லாரி மோதி பெண் ஒருவர் பலியானார்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியில் மொபட் மீது கன்டெய்னர் லாரி மோதி பெண் ஒருவர் பலியானார்.

கன்டெய்னர் லாரி மோதல்

மதுரவாயல் பாக்கியலட்சுமி நகர், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் தயாளன். இவரது மனைவி சித்ரா (வயது 37). இவர்களது மகள் ஆனந்தி (19). ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று தனது மகளை கல்லூரியில் இருந்து சித்ரா, மொபட்டில் வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டு இருந்தார்.

மொபட்டை ஆனந்தி ஓட்டினார். பின்னால் சித்ரா அமர்ந்து இருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, பூந்தமல்லி மேம்பாலம் அருகே சென்றபோது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, மொபட் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் சித்ராவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். இதையடுத்து அந்த வழியே வந்த வாகன ஓட்டிகளின் உதவியுடன் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

பெண் பலி

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சித்ரா வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், விபத்துக்கு காரணமான கன்டெய்னர் லாரி டிரை வர் ராஜேஸ்(25) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விபத்தில் ஆனந்தி லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Next Story