புளியந்தோப்பில் அனுமதியின்றி குடிநீர் விற்பனை; மோட்டார் பறிமுதல்


புளியந்தோப்பில் அனுமதியின்றி குடிநீர் விற்பனை; மோட்டார் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Feb 2017 9:46 PM GMT (Updated: 18 Feb 2017 9:46 PM GMT)

சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிநீர் வாரிய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அ

சென்னை,

சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிநீர் வாரிய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது நேரு நகர் முதல் தெருவில் ஒருவர், அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை தனது வீட்டில் உள்ள 2 கிணறுகளில் இருந்து எடுத்து 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் கேன்களில் நிரப்பி விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அங்கிருந்த மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோன்று குடிநீர் வாரிய அதிகாரிகள் மோட்டாரை பறிமுதல் செய்யும் நிகழ்வு சென்னையில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

மேற்கண்ட தகவல் சென்னை குடிநீர் வாரிய செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story