திருவொற்றியூரில் துணிகரம்: என்ஜினீயர் வீட்டில் 25 பவுன் நகை, பணம் கொள்ளை


திருவொற்றியூரில் துணிகரம்: என்ஜினீயர் வீட்டில் 25 பவுன் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 18 Feb 2017 9:49 PM GMT (Updated: 18 Feb 2017 9:48 PM GMT)

திருவொற்றியூர் காலடிப்பேட்டை சின்ன மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் வடிவேலு (வயது 38). அம்பத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் காலடிப்பேட்டை சின்ன மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் வடிவேலு (வயது 38). அம்பத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது தங்கையின் திருமண நிச்சயதார்த்த விழா தாம்பரத்தில் நடைபெற்றது.

அதற்காக நேற்று முன்தினம் வடிவேலு குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். நேற்று அதிகாலை இவரது வீட்டில் இருந்து வாலிபர் ஒருவர் வெளியே வந்துள்ளார். சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டு பெண் சென்று பார்த்தபோது வடிவேலுவின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கதவு கிடந்தது.

தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, மர்மநபர் வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து 25 பவுன் தங்க நகை மற்றும் 17 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபரை தேடி வருகிறார்கள்.

Next Story