அம்பத்தூர்–பெரம்பூரில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்


அம்பத்தூர்–பெரம்பூரில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2017 10:05 PM GMT (Updated: 18 Feb 2017 10:04 PM GMT)

அம்பத்தூர் பஸ் நிலையம் அருகே நேற்று காலை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 300 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவடி,

அம்பத்தூர் பஸ் நிலையம் அருகே நேற்று காலை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 300 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அம்பத்தூர் எம்.எல்.ஏ. அலெக்சாண்டர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர். சுமார் அரை மணி நேர ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேபோல் பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேலை கண்டித்து பெரம்பூர் தொகுதி முன்னாள் பகுதி செயலாளர் கே.கே.ரமேஷ் தலைமையில் 20–க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமான பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நேற்று காலை எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் இருந்து ஊர்வலமாக சென்று எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் கோ‌ஷமிட்டனர். மேலும் ஓட்டு போட்ட தொகுதி மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் விலை போன வெற்றிவேல் எம்.எல்.ஏ. தலைமறைவாகி விட்டதாகவும் அவர்கள் கோ‌ஷமிட்டனர். 

Next Story