பெசன்ட் நகர் கடற்கரையில் கழுத்தை நெரித்து தொழிலாளி கொலை
பெசன்ட் நகர் கடற்கரையில் கழுத்தை நெரித்து கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
ஆலந்தூர்,
சென்னை பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜன்(வயது 45). கூலித் தொழிலாளி. இவருக்கு லட்சுமி (40) என்ற மனைவியும், விமல்(24), அமுல்ராஜ்(20) என 2 மகன்களும் உள்ளனர்.
நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற தர்மராஜன், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை காணவில்லை.
பிணமாக கிடந்தார்இந்த நிலையில் நேற்று காலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரை மணல் பரப்பில் தர்மராஜன், பிணமாக கிடந்தார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தது. மேலும் அவரது உடலிலும் சில காயங்கள் காணப்பட்டது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், தர்மராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கழுத்தை நெரித்து கொலையாரோ மர்மநபர்கள் தர்மராஜனை கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது பற்றி திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தர்மராஜனை கழுத்தை நெரித்து கொலை செய்தனரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.