கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை 2 குழந்தைகள் அனாதையான பரிதாபம்


கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை 2 குழந்தைகள் அனாதையான பரிதாபம்
x
தினத்தந்தி 24 March 2017 11:15 PM GMT (Updated: 24 March 2017 9:27 PM GMT)

பாங்கோட்டில், கணவன் இறந்த துக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாத மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவனந்தபுரம்,

கணவன் மரணம்

திருவனந்தபுரம் பாங்கோட்டை சேர்ந்தவர் பிஜூ(வயது 40). இவரது மனைவி சின்னு(29) இவர்களுக்கு பிஜீஷ்(9) வித்யா(11) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான பிஜூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 9 தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது உடல் வீட்டு தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கணவன் இறந்த துக்கம் தாங்காமல் அழுது புலம்பிய சின்னு மிகுந்த மன வேதனையுடன் காணப்பட்டார்.

மனைவி தற்கொலை

இதனிடையே நேற்று இரவு அனைவரும் தூங்கி கொண்டிருந்த வேளை பார்த்து, கணவன் புதைக்கப்பட்ட கல்லரையை நோக்கியவாறு வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன் இறந்த துக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாத மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தாயும், தந்தையையும் இழந்த 2 குழந்தைகளும் அனாதையாகி செய்வதறியாமல் தவித்து வருகிறார்கள்.


Next Story