தேனாம்பேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடியவர், துரைப்பாக்கத்தில் சிக்கினார் 2 பேர் தப்பி ஓட்டம்
தேனாம்பேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடிச்சென்றவர் துரைப்பாக்கத்தில் சிக்கினார். தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தின் முன் நிறுத்தி இருந்த 2 மோட்டார் சைக்கிள்களை திருடிவிட்டு 3 மர்மநபர்கள் தப்பிச்செல்வதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
இந்தநிலையில் துரைப்பாக்கம் பெருங்குடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 மர்மநபர்கள் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிள்களை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினர்.
அவர்களை விரட்டிச்சென்ற போலீசார், ஒருவரை மடக்கிப்பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
2 பேருக்கு வலைவீச்சுபிடிபட்டவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்த போது அவர், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த திலகர்(வயது 38) என்பதும், தேனாம்பேட்டையில் மோட்டார் சைக்கிள்களை திருடி விட்டு தப்பி வரும் போது துரைப்பாக்கம் போலீசாரிடம் சிக்கியதும், ஏற்கனவே மோட்டார் சைக்கிள் திருட்டில் சிறை சென்று உள்ளதும் தெரிந்தது.
இதுபற்றி துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலகரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
முதியவர் பலி* ஆவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயில் அடிபட்டு பலியானார்.
* செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கத்தில் சாந்தி(45) என்பவரிடம் 5 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
* ஜெ.தீபாவை அவதூறாக பேசியதாகக்கூறி, திருவொற்றியூரில் எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவையை சேர்ந்த மகளிர் அணியினர் அமைச்சர் செல்லூர் ராஜூவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
* தரமணி 100 அடி சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்ற வேளச்சேரியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரவி (45), மாநகர பஸ் மோதி பலியானார். இதுதொடர்பாக பஸ் டிரைவர் சரவணன் (39) கைது செய்யப்பட்டார்.