விபத்தில் தொழிலாளி பலி: தனியார் பஸ் டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை திருவொற்றியூர் கோர்ட்டு தீர்ப்பு


விபத்தில் தொழிலாளி பலி: தனியார் பஸ் டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை திருவொற்றியூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 24 March 2017 11:04 PM GMT (Updated: 24 March 2017 11:04 PM GMT)

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கடந்த 2011–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மோட்டார் சைக்கிளில் சென்ற அதே பகுதியை சேர்ந்த

ராயபுரம்,

 கூலி தொழிலாளி ஸ்ரீமாலு(வயது 54) என்பவர் அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோதி உயிரிழந்தார்.

இதுபற்றி வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவர் வெங்கடேசனை(30) கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு திருவொற்றியூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறிய மாஜிஸ்திரேட்டு பஸ் டிரைவர் வெங்கடேசனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவின்பேரில் வெங்கடேசன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story