‘நீட்’ தேர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் கனிமொழி எம்.பி. பேட்டி


‘நீட்’ தேர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் கனிமொழி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 24 March 2017 11:08 PM GMT (Updated: 24 March 2017 11:08 PM GMT)

தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஆலந்தூர்,

தமிழகத்தில் மாணவர்கள் பிளஸ்–2 தேர்வுகளை முடிக்கும் தருவாயில் உள்ள நிலையில் ‘நீட்’ தேர்வு அறிவிக்கப்பட்டு இருப்பதால் பெரும் அளவில் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மீத்தேன் திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என மத்திய அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இந்த பிரச்சினையை தி.மு.க. கையில் எடுக்கும். தமிழக அரசும் இந்த திட்டத்தை அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story