மயிலாடுதுறை, கும்பகோணத்தில் பராமரிப்பு பணி: ரெயில் போக்குவரத்து இன்று முதல் மாற்றம்


மயிலாடுதுறை, கும்பகோணத்தில் பராமரிப்பு பணி: ரெயில் போக்குவரத்து இன்று முதல் மாற்றம்
x
தினத்தந்தி 5 April 2017 10:15 PM GMT (Updated: 5 April 2017 8:58 PM GMT)

மயிலாடுதுறை, கும்பகோணத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் ரெயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி,

மயிலாடுதுறை, கும்பகோணம் ரெயில் நிலையங்களில் ரெயில்வே என்ஜினீயரிங் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி அந்த வழித்தடத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் (மே) 23-ந்தேதி வரை (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர) ரெயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. அதன்படி இன்று முதல் அடுத்த மாதம் 23-ந்தேதி வரை திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். அந்த ரெயில் பெட்டிகள் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கப்படும்.

மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில்

இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை தவிர) மயிலாடுதுறை-நெல்லை பயணிகள் ரெயில் மயிலாடுதுறையில் இருந்து பகல் 11.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக பகல் 12.20 மணிக்கு புறப்படும். இதேபோல திருச்சி-சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் 20 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படும்.

வருகிற 14-ந்தேதி முதல் அடுத்த மாதம் 23-ந்தேதி வரை (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை தவிர) மயிலாடுதுறை-மைசூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் மயிலாடுதுறை-திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. திருச்சியில் இருந்து மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு செல்லும்.மேற்கண்ட தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story