புதுவண்ணாரப்பேட்டையில் மறியலில் ஈடுபட்ட 300 பேர் கைது


புதுவண்ணாரப்பேட்டையில் மறியலில் ஈடுபட்ட 300 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2017 11:00 PM GMT (Updated: 24 Jun 2017 5:47 PM GMT)

ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த 300 பேர், புதுவண்ணாரப்பேட்டை சவுந்திரப்பாண்டி பள்ளி அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராயபுரம், 

சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி சி.பி.சி.எல் நிறுவனம் வரை கடலுக்கு அடியில் கச்சா எண்ணெய் குழாய் பதிக்கும் பணி தொடங்கி உள்ளது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் சசிகலா நாகலிங்கம் தலைமையில், ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த 300 பேர், புதுவண்ணாரப்பேட்டை சவுந்திரப்பாண்டி பள்ளி அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

Next Story