எத்தனை எம்.எல்.ஏ.க்கள் சென்றாலும் தொண்டர்கள் ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியை பிடிப்பார்


எத்தனை எம்.எல்.ஏ.க்கள் சென்றாலும் தொண்டர்கள் ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியை பிடிப்பார்
x
தினத்தந்தி 24 July 2017 3:00 AM GMT (Updated: 23 July 2017 8:24 PM GMT)

எத்தனை எம்.எல்.ஏ.க்கள் சென்றாலும் தொண்டர்கள் ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியை பிடிப்பார் மதுசூதனன் பேட்டி

ராயபுரம்,

சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி வரை சி.பி.சி.எல். நிறுவனம் சார்பில் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் நடைபெற்று வரும் குழாய்கள் அமைக்கும் பணியை அ.தி.மு.க.(புரட்சித்தலைவி அம்மா) அணியை சேர்ந்த மதுசூதனன் பார்வையிட்டார். அங்கிருந்த மீனவ மக்களிடம், குழாய் பதிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவரிடம், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த ஆறுகுட்டி எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தது குறித்து நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு மதுசூதனன், ‘‘நாங்கள் என்றுமே லட்சியத்துக்காகவும், கொள்கைக்காகவும் போராடுவோம். எத்தனை எம்.எல்.ஏ.க்கள் எங்களை விட்டு சென்றாலும் ஆயிரம், ஆயிரம் தொண்டர்கள் ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் கட்சியையும், ஆட்சியையும் பிடிப்பார். சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை கட்சியில் இருந்தும், ஆட்சியில் இருந்தும் அப்புறப்படுத்துவார்’’ என்றார்.


Next Story