சிந்தாதிரிப்பேட்டை, பட்டினப்பாக்கம் பகுதியில் அடுத்தடுத்து 6 வீடுகளில் கொள்ளை


சிந்தாதிரிப்பேட்டை, பட்டினப்பாக்கம் பகுதியில் அடுத்தடுத்து 6 வீடுகளில் கொள்ளை
x
தினத்தந்தி 19 Aug 2017 9:30 PM GMT (Updated: 19 Aug 2017 7:29 PM GMT)

சென்னை நகரில் செயின் பறிப்பு சம்பவங்களும், வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

சென்னை, 

சென்னை பட்டினபாக்கம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த சரஸ்வதி(60) என்பவர் வீடு உள்பட அப்பகுதியில் 3 பேருடைய வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 3 செல்போன்கள், 1 பவுன் தங்க நகை, ரூ.4 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதே போன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை கோயிலுரம்மன் கோவில் தெருவை சேர்ந்த வினோத் குமார், சிந்தாதிரிப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்த கபிலன் ஆகியோரது வீடுகள் உள்பட அப்பகுதியில் 3 வீடுகளில் 5 பவுன் நகை, ரூ.40 ஆயிரம், செல்போன், லேப்-டாப் போன்ற பொருட்களும் கொள்ளை போனது.

இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை பீதியடைய செய்துள்ளது. 

Next Story