ஆட்டோ டிரைவருக்கு சரமாரி கத்திக்குத்து வழிப்பறி கொள்ளையர்கள் 6 பேர் கைது


ஆட்டோ டிரைவருக்கு சரமாரி கத்திக்குத்து வழிப்பறி கொள்ளையர்கள் 6 பேர் கைது
x
தினத்தந்தி 19 Aug 2017 9:45 PM GMT (Updated: 19 Aug 2017 7:30 PM GMT)

பணம் கொடுக்க மறுத்த ஆட்டோ டிரைவரை சரமாரியாக கத்தியால் குத்தியதாக வழிப்பறி கொள்ளையர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராயபுரம்,

சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் சரத்குமார் (வயது26). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். கடந்த 8-ந்தேதி இரவு அன்று, கருமாரியம்மன் நகர் வழியாக அவர் சென்றார். அப்போது சரத்குமாரை 6 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்து பணம் பறிக்க முயற்சித்தனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டதோடு ‘திருடன்’ ‘திருடன்’ என சத்தம் போட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வழிப்பறி கொள்ளையர்கள் அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டனர்.

வழிப்பறி கொள்ளையர்கள் கைது

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ஆர்.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜெ. ஜெ. நகர் நாவலர் குடியிருப்பு காரனேசன் நகரை சேர்ந்த ரவி(23), தர்மா (22), பிரவின்(21), மணி (22), கோட்டீஸ்வரன் (20), கார்த்தி(19) ஆகிய 6 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். 

Next Story