டி.என்.பி.எஸ்.சி. - உதவி வன பாதுகாவலர் பணி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., உதவி வன பாதுகாவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குரூப்-1ஏ, தரத்திலான இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 14 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 1-7-2017-ந்தேதியில் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும் பிரிவினர் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.வனவியல், தாவரவியல், உயிரியியல், இயற்பியல், வேதியியல், கணிதவியல், புள்ளியியல், புவியியல், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கால்நடை அறிவியல் பட்டப்படிப்புகள் மற்றும் என்ஜினீயரிங் பட்டப்படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, உடல்தகுதி தேர்வு, வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். 9-10-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும் பிரிவினர் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.வனவியல், தாவரவியல், உயிரியியல், இயற்பியல், வேதியியல், கணிதவியல், புள்ளியியல், புவியியல், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கால்நடை அறிவியல் பட்டப்படிப்புகள் மற்றும் என்ஜினீயரிங் பட்டப்படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, உடல்தகுதி தேர்வு, வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். 9-10-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story