ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்


ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
x
தினத்தந்தி 13 Jan 2017 10:30 PM GMT (Updated: 13 Jan 2017 8:13 PM GMT)

ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு கணினி மென்பொருள் வாங்கியதில் ரூ.225 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதுடெல்லி

ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு 2011–ம் ஆண்டு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் (கணினி மென்பொருள்) வாங்கியதில் ரூ.225 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில் ஏர் இந்தியாவின் தலைமை கண்காணிப்பு அதிகாரி அளித்த அறிக்கைகளை மத்திய கண்காணிப்பு ஆணையம் பரிசீலித்தது. அதைத் தொடர்ந்து, சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு பரிந்துரை செய்தது.

அதை சி.பி.ஐ. பரிசீலனை செய்ததில், வழக்கு பதிவு செய்வதற்கான அடிப்படை முகாந்திரம் இருப்பதாக கண்டறிந்தது. எனவே ஏர் இந்தியா, ஜெர்மனி நிறுவனமான எஸ்ஏபி ஏஜி மற்றும் சர்வதேச நிறுவனமான ஐ.பி.எம். ஆகியவற்றின் பெயர் குறிப்பிடாத அதிகாரிகள் மீது சி.பி.ஐ. நேற்று வழக்கு பதிவு செய்தது.

இது பற்றி சி.பி.ஐ., கருத்து கூறுகையில், ‘‘ மத்திய கண்காணிப்பு ஆணையம் செய்த சிபாரிசை ஆராய்ந்தபோது, ஏர் இந்தியாவுக்கு சாப்ட்வேர் வாங்கியதில். பணம் செலுத்தியதில், சேவைகள் வழங்கியதில் பலமுறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்தது. எனவே வழக்கு பதிவு செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தது.


Next Story