தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா காலமானார்
பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரியும் மற்றும் தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா (வயது 91) உடல்நலக்குறைவால் காலமானார்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும் தமிழக முன்னாள் கவர்னருமான சுர்ஜித் சிங் பர்னாலா கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். உடல்நலக்குறைவால் சண்டிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். சுர்ஜித்சிங் பர்னாலா 1990-91 2004-2011 வரை
தமிழக கவர்னராக பதவி வகித்தார். இரண்டு முறை தமிழக கவர்னராக பதவி வகித்தார். வாஜ்பாய் அமைச்சரவையில் ரசாயனத்துறை அமைச்சராக பர்னாலா பதவி வகித்துள்ளார். லக்னோவில் சட்டம் பயின்ற பர்னாலா சுதந்திர போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். தமிழ்நாடு,ஆந்திரா,உத்தரகாண்ட் உள்ளிட்ட 4 மாநில கவர்னராக இருந்தவர் பர்னாலா என்பது குறிப்பிடத்தக்கது
Next Story