ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மத்திய மந்திரி பஸ்வான் வீடு திரும்பினார்


ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மத்திய மந்திரி பஸ்வான் வீடு திரும்பினார்
x
தினத்தந்தி 15 Jan 2017 9:45 PM GMT (Updated: 15 Jan 2017 9:33 PM GMT)

ராம் விலாஸ் பஸ்வான் கடந்த 12–ந்தேதி மூச்சுத்திணறல் காரணமாக பாட்னாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பாட்னா

மத்திய மந்திரியும், லோக் ஜன சக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான் கடந்த 12–ந்தேதி மூச்சுத்திணறல் காரணமாக பாட்னாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பஸ்வானின் உடல்நிலை குணமடைந்து விட்டதால் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று வீடு திரும்பினார்.

முன்னதாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பஸ்வானை பீகார் முதல்–மந்திரி நிதிஷ்குமார் உள்பட பல்வேறு தலைவர்கள் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.


Next Story