டெல்லியில் 14 ஆண்டுகளில் 100 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த காமகொடூரன் கைது


டெல்லியில் 14 ஆண்டுகளில் 100 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த காமகொடூரன் கைது
x
தினத்தந்தி 16 Jan 2017 8:06 AM GMT (Updated: 16 Jan 2017 8:06 AM GMT)

டெல்லியில் நாடே அதிர்ச்சியுறும் வகையில் நூற்றுக்கணக்கான மாணவிகளை காமுகன் ஒருவன் கற்பழித்த தகவல் வெளியாகியுள்ளது.


புதுடெல்லி,

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்தவன் சுனில் ரஸ்தோகி. டெல்லியில் வசித்து வருகிறான். இவனுக்கு தற்போது 38 வயதாகிறது. திருமணமாகி மனைவியும், 3 மகள்கள், 2 மகன்களும் உள்ளனர். இவன் 12 வயதிலேயே 1990-ம் ஆண்டு டெல்லிக்கு பிழைப்பு தேடி வந்தான். டெய்லர்களிடம் உதவியாளராக வேலைக்கு சேர்ந்து பின்னர் சொந்தமாக டெய்லர் தொழில் செய்து வந்தான்.

சிறு வயதிலேயே இவன் காம கொடூரனாக இருந்து வந்துள்ளான். டெல்லியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு செல்வான். அங்கு பள்ளி முடிந்து வீடு திரும்பும் 7 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை சந்தித்து தெரிந்தவன் போல் பேச்சு கொடுப்பான். தன்னை சிறுமியின் தந்தை அனுப்பி வைத்ததாகவும், துணிகள் பொருட்கள் வாங்கி கொடுத்ததாகவும் கூறி ஒதுக் குப்புறமான இடத்துக்கு அழைத்துச் செல்வான்.

அங்கு சிறுமிகளை மிரட்டியும் அடித்து உதைத்தும் பாலியல் பலாத்காரம் செய்து விரட்டி விடுவான். இதுபோல் சிறுமிகளை குறி வைத்து பாலியல் கொடுமை செய்து வந்தான். திருமணத்துக்கு முன்பும், திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்தான். வெளிப் பார்வைக்கு நல்லவன் போல் வேலைக்கு சென்று வந்தான்.

கடந்த 2004-ம் ஆண்டு கிழக்கு டெல்லியில் வசித்த போது பக்கத்து வீட்டு சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டான். உடனே பெற்றோர் அவனை கையும் களவுமாக பிடித்து அடித்து உதைத்தனர். அதன்பிறகும் அந்தப் பகுதியில் சுற்றி வந்தான்.

இதற்கிடையே கடந்த 10-ந் தேதி 2 பெற்றோர் பள்ளியில் படிக்கும் தங்களது மகள்கள் மர்ம நபரால் கடத்தி கொடுமைப்படுத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்தனர். இதுபோல் ஏற்கனவே சிறுமிகள் கடத்தல், பாலியல் கொடுமைகளும் நடந்து வந்தன. அவை அனைத்தும் ஒன்று போல் இருந்தன. எனவே ஒரே நபர் தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

காம கொடூரன் பற்றி கிழக்கு டெல்லி பகுதியில் போலீசார் விசாரித்தபோது டெய்லர் ரஸ்தோகி பக்கத்து வீட்டு சிறுமியிடம் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. அவனைப் பிடித்து விசாரித்தபோது சிறுமிகளிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டான்.

சிறுமிகள் கடத்தப்பட்ட பள்ளிகள், பொது இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ரஸ்தோகி உருவம் பதிவாகி இருந்தது. இதையடுத்து நேற்று காமகொடூரன் ரஸ்தோகி கைது செய்யப்பட்டான். அவன் கடந்த 14 ஆண்டாக இதுபோன்ற பாலியல் கொடுமையில் ஈடுபட்ட தாகவும் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளை கொடுமைப் படுத்தியதாகவும் வாக்கு மூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story