மாணவியை தன் முன்னே குளிக்க சொல்லி பாலியல் கொடுமை செய்த ஆசிரியர்


மாணவியை தன் முன்னே குளிக்க சொல்லி பாலியல் கொடுமை செய்த ஆசிரியர்
x
தினத்தந்தி 16 Jan 2017 9:59 AM GMT (Updated: 16 Jan 2017 9:59 AM GMT)

மராட்டிய மாநிலத்தில் தன்னிடம் படிக்கும் மாணவியை தன் கண் முன்னே குளிக்க சொல்லி பாலியல் கொடுமை செய்த ஆசிரியரை போலீசார் தேடி வருகிறார்கள்.


மராட்டிய மாநிலம் பீர்மாவட்டத்தில் ஷிருர் தாலுகாவில்  அரசு உதவி பெறும் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த் பள்ளியில் அந்த பகுதியை சுற்றி உள்ள கரும்பு விவசாயிகலின் குழந்தைகள் படித்து வந்தனர்.அங்கு ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் அவர் வகுப்பின் ஆசிரியர் கடந்த ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடம் முடிந்தவுடன் அவரின் உடைகளை கழட்டி விட்டு தன் முன்னர் குளிக்க வற்புறுத்தியுள்ளார்.

இதை யாரிடமும் சொல்ல கூடாது எனவும் அவரை மிரட்டியுள்ளார். பொருத்து பார்த்த அந்த சிறுமி பின்னர் இந்த விடயத்தை அவர் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பொலிசார் அந்த ஆசிரியரை தேடி அவர் வீட்டுக்கு சென்ற போது அவர் வீடு பூட்டப்பட்டிருந்தது.

பொலிசார் வருவதை முன்பே தெரிந்த கொண்ட அவர் தலைமறைவாகியிருக்கலாம் என தெரிகிறது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், அந்த ஆசிரியரை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளோம், விரைவில் அவரை பிடித்து விடுவோம் என கூறியுள்ளனர். தற்போது அந்த ஆசிரியர் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யபட்டு உள்ளார்.

Next Story