காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 16 Jan 2017 9:15 PM GMT (Updated: 16 Jan 2017 8:28 PM GMT)

காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் அருகே ஆவோரா என்னும் கிராமம்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் அருகே ஆவோரா என்னும் கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை அங்கு விரைந்து சென்ற அவர்கள் அந்த வீட்டை முற்றுகையிட்டு பயங்கரவாதிகளை சரண் அடையும்படி எச்சரித்தனர்.

அதற்கு மறுத்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுடத் தொடங்கினர். படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்பிலும் சிறிது நேரம் துப்பாக்கி சண்டை நீடித்தது. பின்னர், இருள் சூழ்ந்ததால் பாதுகாப்பு படையினர் சண்டையை நிறுத்தினர்.

நேற்று காலை மீண்டும் மோதல் தொடங்கியது. இந்த சண்டையில் வீட்டுக்குள் இருந்த 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு அவர்கள் பயன்படுத்திய எந்திர துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

சண்டை நடந்த இடத்தில் இருந்து சில பயங்கரவாதிகள் தப்பிச் சென்று இருக்கலாம் என்று சந்தேகப்படுவதால் பாதுகாப்பு படையினர் அந்த வீட்டைச் சுற்றியுள்ள காட்டு பகுதிக்குள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story