காஷ்மீரில் பாகிஸ்தான் கொடி ஏந்திச்சென்ற இளைஞர்கள், பாதுகாப்பு படை மீது கல் வீசியும் தாக்குதல்


காஷ்மீரில்  பாகிஸ்தான் கொடி ஏந்திச்சென்ற இளைஞர்கள், பாதுகாப்பு  படை மீது கல் வீசியும் தாக்குதல்
x
தினத்தந்தி 17 Feb 2017 11:38 AM GMT (Updated: 17 Feb 2017 11:38 AM GMT)

காஷ்மீரில் பாகிஸ்தான் தேசியக்கொடியை ஏந்திச்சென்ற இளைஞர்கள், பாதுகாப்பு படையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று பல இடங்களில் இளைஞர்கள்  பாகிஸ்தான் கொடியை ஏந்திச்சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இளைஞர்கள் தங்கள் முகத்தில் துணியை கட்டியபடி பாகிஸ்தான் கொடிகளை அசைத்தபடி சென்றனர். அப்போது, நவ்ஹட்டா பகுதி அருகே வந்த போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு படையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

 இதையடுத்து பாதுகாப்பு  படையினர் கண்ணீர் புகை குண்டு வீச்சு தடியடி நடத்தி இளைஞர்களை கலைத்தனர்.  இந்த தடியடியில் தற்போது வரை எந்த காயமும் யாருக்கும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. தெற்கு காஷ்மீர், வடக்கு காஷ்மீர் பகுதிகளிலும் சில இடங்களில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசும் சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story