காஷ்மீரில் ரூ.4 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் 2 பேர் கைது
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் கள்ளநோட்டு அச்சடிக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஜம்மு,
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் கள்ளநோட்டு அச்சடிக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு 2 பேர் கள்ளநோட்டுகளை அச்சடித்துக்கொண்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அங்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள 500 மற்றும் 2,000 ரூபாய் கள்ளநோட்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே இருவரையும் போலீசார் கைது செய்து, கள்ளநோட்டுகளையும், கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட எந்திரங்களையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், கைதான இருவரும் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக அச்சடித்தது தெரியவந்தது.
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் கள்ளநோட்டு அச்சடிக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு 2 பேர் கள்ளநோட்டுகளை அச்சடித்துக்கொண்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அங்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள 500 மற்றும் 2,000 ரூபாய் கள்ளநோட்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே இருவரையும் போலீசார் கைது செய்து, கள்ளநோட்டுகளையும், கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட எந்திரங்களையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், கைதான இருவரும் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக அச்சடித்தது தெரியவந்தது.
Next Story