மும்பை:பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து 4 பேர் பலி 2 பேர் காயம்


மும்பை:பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து 4 பேர் பலி 2 பேர் காயம்
x
தினத்தந்தி 19 Feb 2017 12:00 PM GMT (Updated: 19 Feb 2017 12:00 PM GMT)

மும்பை அருகே பிவான்டியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை அருகே உள்ள பிவாண்டியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் மின் கசிவு காரணமாக தீ பரவியது சற்று நேரத்திற்குள் தீ மள மளவென தொழிற்சாலை முழுவதும் பரவத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வந்த தீயணைப்பு மீட்புப் பணி வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 4 பேர் பலியானதாகவும், 2 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story