டெல்லி அஞ்சல் நிலையத்தில் 17 பண மூட்டைகள் கொள்ளை
டெல்லியில் உள்ள அஞ்சல் நிலையம் ஒன்றில், கொள்ளையர்கள் சிலர் பண மூட்டைகளை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் பகுதியில் செயல்பட்டு வரும் அஞ்சல் நிலையத்தில்இன்று அதிகாலை அஞ்சலக ஊழியர்கள் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சிலர், 17 மூட்டைகளில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இரவு நேர பாதுகாவலர்கள் , உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இரவு நேர பாதுகாவலர்கள் , உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story