டெல்லியில் வாஷிங் மெஷினில் மூழ்கி 3 வயது இரட்டை சகோதரர்கள் உயிரிழந்தனர்


டெல்லியில் வாஷிங் மெஷினில் மூழ்கி 3 வயது இரட்டை சகோதரர்கள் உயிரிழந்தனர்
x
தினத்தந்தி 25 Feb 2017 6:00 PM GMT (Updated: 25 Feb 2017 6:00 PM GMT)

டெல்லியில் வாஷிங் மெஷினில் விழுந்து மூழ்கி 3 வயது நிறைந்த இரட்டை சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியின் வடமேற்கில் வசித்து வருபவர் ரவீந்தர்.  இவரது மனைவி ரேகா.  இந்த தம்பதிக்கு நாக்ஷ் மற்றும் நீஷூ என 3 வயதில் இரட்டை சகோதரர்களான மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று மதியம் ரேகா வாஷிங் மெஷினில் தண்ணீர் ஊற்றி உள்ளார்.  அது 15 லிட்டர் அளவுக்கு இருக்க கூடும் என கூறப்படுகிறது.  அதன்பின் அவர் கடையில் சோப்பு தூள் வாங்குவதற்காக சென்றுள்ளார்.

அவர் அரை மணிநேரம் கழித்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.  அங்கே அவரது குழந்தைகளை காணவில்லை.  இதுபற்றி தனது கணவரிடம் கூறியுள்ளார்.  காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ரவீந்தர் உடனடியாக வீட்டிற்கு வந்துள்ளார்.

அங்கு குழந்தைகள் இருவரும் வாஷிங் மெஷினில் கிடந்தது தெரிய வந்தது.  அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால், குழந்தைகள் இருவரும் இறந்து விட்டனர் என கூறியுள்ளனர்.

அந்த குழந்தைகள் சலவைக்காக இருந்த துணிகளை பிடித்து ஏறி வாஷிங் மெஷினில் இருந்த தண்ணீரில் விழுந்திருக்க கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.  சட்ட பிரிவு 174ன் கீழ் (தற்கொலை மற்றும் பிறவற்றை பற்றி விசாரணை செய்து அறிக்கை அளிப்பது) போலீசார் விசாரணை நடந்து வருகிறது.

Next Story