ஏடிஎம்மில் சீரியல் எண்கள் இன்றி வந்த புதிய 500 ரூபாய் நோட்டுக்களால் பரபரப்பு


ஏடிஎம்மில் சீரியல் எண்கள் இன்றி  வந்த புதிய 500 ரூபாய் நோட்டுக்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Feb 2017 5:20 AM GMT (Updated: 28 Feb 2017 5:19 AM GMT)

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு ஏடிஎம்மில் வந்த 500 ரூபாய் நோட்டுகளில் சீரியல் எண்கள் இடம் பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டமோ,

பணமதிப்பு நீக்க நடவடிக்கை யால் ஏடிஎம் மற்றும் வங்கி கிளை களில் இருந்து பணம் எடுப்பதற்கு கடும் கட்டுப்பாட்டுகள் விதிக்கப் பட்டன. தற்போது அந்த கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்டாலும், பணப் புழக்கம் இயல்பு நிலைக்கு முழுமையாக திரும்பவில்லை.  பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரூ 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் தாள்கள் சிலவற்றில் குளறுபடிகள் இருப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. 

இந்த நிலையில்,  மத்திய பிரதேசத்தில் உள்ள டமோ என்ற இடத்தில்  இருக்கும் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் மையத்தில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் 500 ரூபாய் தாள்களில்  சீரியல் எண்கள் இடம் பெறவில்லை. இது பணம் எடுத்தவரை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வங்கி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


Next Story