சிவசேனா எம்.பி.யின் அநாகரிக செயல்; புகார் தொடர்பாக நடவடிக்கை சுமித்ரா மகாஜன் உறுதி


சிவசேனா எம்.பி.யின் அநாகரிக செயல்; புகார் தொடர்பாக நடவடிக்கை சுமித்ரா மகாஜன் உறுதி
x
தினத்தந்தி 24 March 2017 6:56 AM GMT (Updated: 24 March 2017 6:55 AM GMT)

சிவசேனா எம்.பி.யின் அநாகரிக செயல் தொடர்பாக மக்களவை சபாநாயகர் பேசுகையில் எந்தஒரு புகார் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிஉள்ளார்.

புதுடெல்லி,

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் ஏர்இந்தியா மேலாளரை செருப்பால் அடித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் தைரியம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள் என டெல்லி போலீசுக்கு சவால் விடுத்து உள்ளார். மேலும் நான் மன்னிப்பு தெரிவிக்க மாட்டேன், ஏர் இந்தியா மேலாளர் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறிஉள்ளார். இவ்விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், “சம்பவம் பாராளுமன்றத்திற்கு வெளியே நடந்து உள்ளது, எனவே முழு தகவல்களையும் பெற வேண்டும் மற்றும் எந்தஒரு புகார் வந்தாலும் அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். 

Next Story