வருமான வரி சோதனைகளில் கணக்கில் காட்டாத வருமானம் ரூ.45 ஆயிரம் கோடி கண்டுபிடிப்பு


வருமான வரி சோதனைகளில் கணக்கில் காட்டாத வருமானம் ரூ.45 ஆயிரம் கோடி கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 24 March 2017 9:45 PM GMT (Updated: 24 March 2017 7:35 PM GMT)

பாராளுமன்றத்தில் மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி சந்தோஷ் கங்குவார் எழுத்து மூலம் ஒரு கேள்விக்கு நேற்று பதில் அளித்தார்.

புதுடெல்லி

பாராளுமன்றத்தில் மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி சந்தோஷ் கங்குவார் எழுத்து மூலம் ஒரு கேள்விக்கு நேற்று பதில் அளித்தார்.

அந்த பதிலில், 2013–2014, 2014–15, 2015–16 மற்றும் நடப்பு நிதி ஆண்டில் ஜனவரி மாதம் வரையில் 2 ஆயிரத்து 534 தரப்பினரிடம் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனைகளில், கணக்கில் வராத ரூ.45 ஆயிரத்து 622 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:–

* வருமான வரி சோதனைகளில் கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், ரூ.3 ஆயிரத்து 625 கோடி மதிப்பிலான ரொக்கப்பணமும், நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

* வருமான வரி சட்டத்தின் கீழ் கிரிமினல் கோர்ட்டுகளில் 116 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

* 3 ஆயிரத்து 218 விவகாரங்களில் சம்பந்தப்பட்ட நபர்களும், வருமான வரித்துறையினரும் பேசி சமசரம் செய்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story