பஞ்சாபில் பெற்றோர் சம்மதத்துடன் ஓரின திருமணம் செய்து கொண்ட பெண் போலீஸ் அதிகாரி


பஞ்சாபில் பெற்றோர் சம்மதத்துடன் ஓரின திருமணம் செய்து கொண்ட பெண் போலீஸ் அதிகாரி
x
தினத்தந்தி 26 April 2017 6:34 AM GMT (Updated: 26 April 2017 6:33 AM GMT)

பஞ்சாப்பைச் சேர்ந்த பெண் ஒருவர், மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


பஞ்சாப்பைச் சேர்ந்தவர் திருநம்பி. இவர் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர் என்று கூறப்படுகிறது. இவரின் தற்போதைய பெயர் மஞ்ஞித் கவுர்.

பஞ்சாப் மத்திய சிறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் இவர், சமீபத்தில் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆனால் திருமணம் செய்து கொண்ட பெண் பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த திருமணத்தின் சிறப்பு விஷயம் என்னவென்றால், இரண்டு பெண்களின் குடும்பத்தாரும் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story