பாபா ராம்தேவ் இறந்துவிட்டதாக வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவும் தகவலால் பரபரப்பு


பாபா ராம்தேவ் இறந்துவிட்டதாக வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவும் தகவலால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 April 2017 7:39 AM GMT (Updated: 26 April 2017 7:38 AM GMT)

யோகா குரு பாபா ராம்தேவ் விபத்தில் உயிரிழந்து விட்டதாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிவரும் வதந்தியால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


புதுடெல்லி,


யோகா குரு பாபா ராம்தேவ் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் யோகா பயிற்சி முகாம்களை நடத்தி மிகவும் பிரபலமாக இருப்பவர். ஆன்மீகம் மட்டுமின்றி பல்வேறு வகையான இயற்கையான மூலிகை தயாரிப்புகளை விற்பனை செய்யும் பதஞ்சலி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பா.ஜனதாவிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருபவர். இந்நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் வதந்தி வைரலாக பரவியது.

 பலர் அதிர்ச்சியை தெரிவித்து இச்செய்தியை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள தகவலில், “நான் பாதுகாப்பாகவும், உடல் நலத்துடனும் உள்ளேன். எந்தஒரு வதந்தியையும் நம்பாதீர்கள்,” என குறிப்பிட்டு உள்ளார். 

Next Story