டெல்லி மாநகராட்சி தேர்தல்:காங்கிரஸ் கட்சி மோசமான கட்டத்தில் பயணிக்கிறது ஷீலா தீட்சித் கருத்து
காங்கிரஸ் கட்சி மோசமான கட்டத்தில் பயணிக்கிறது என்று டெல்லி மாநகராட்சி தேர்தல் குறித்து ஷீலா தீட்சித் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் டெல்லி மாநகராட்சி தேர்தல் குறித்து டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் கட்சி மோசமான கட்டத்தில் பயணிக்கிறது. டெல்லி மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு என்னை அழைக்கவில்லை. டெல்லி மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. காங்கிரஸ் கட்சியினர் டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமாக பிரச்சாரம் செய்யவில்லை. எனினும் காங்கிரஸ் கட்சி மீண்டும் புத்துயிர் பெற்று பழைய நிலைமைக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Next Story