இந்தியா-பங்ளாதேஷ் எல்லையில் 100 மீ நீளமுள்ள குகை கண்டுபிடிப்பு


இந்தியா-பங்ளாதேஷ் எல்லையில் 100 மீ நீளமுள்ள குகை கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 26 April 2017 11:47 AM GMT (Updated: 26 April 2017 11:46 AM GMT)

இந்தியா பங்ளாதேஷ எல்லையில் 100 மீ நீளமுள்ள குகையை பாதுகாப்பு படைவீரர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பேட்பூர்,

இந்தியா-பங்ளாதேஷ் எல்லை பகுதியில் பேட்பூர் என்ற இடத்தில் 100 மீ நீளமுள்ள குகையை எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த குகை வழியாக சமூக விரோதிகள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்த குகையின் விவரங்கள்  குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

அந்த குகை வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கலாம் என கருதி அங்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story