பா.ஜ.க.மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி பிரதமர் மோடி


பா.ஜ.க.மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி பிரதமர் மோடி
x
தினத்தந்தி 26 April 2017 12:06 PM GMT (Updated: 26 April 2017 12:05 PM GMT)

பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 2-வது இடத்திலும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 3 இடத்திற்கு தள்ளப்பட்டது.

இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றிகள். டெல்லி மாநகராட்சி தேர்தலில்  மனோஜ் திவாரி தலைமையில் பாஜக வெற்றி அடைந்துள்ளது அவரது உழைப்புக்கு நன்றி.  பாஜக வெற்றி பெற வேண்டும் என கடுமையாக உழைத்த தொண்டர்களை பாராட்டுகிறேன். 

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Next Story