ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து 13 பேர் பலி
ஆந்திராவில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 13 பேர் பலியாகி உள்ளனர்.
ஐதராபாத்,
ஆந்திர மாநிலம் குண்டக்கால் மண்டல் பகுதியில் உள்ள திருவிழாவிற்கு கலந்து கொள்வதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் ஏரியில் படகு மூலம் சென்றனர். இதில் பாரம் தாங்காமல் படகு திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் 3 பேரின் உடல்களை மீட்டனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் நீச்சல் தெரிந்தவர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர். இரவு நேரம் என்பதால் நாளையும் நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். படகு விபத்திற்கு காரணம் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றியதே என உள்ளூர் வாசிகள் கூறியுள்ளனர். இறந்தவர்களில் 4 பேர் பெண்கள் என்றும் 2 பேர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story