கரன்ட் கட்! இருட்டில் கணவர் என நினைத்து பக்கத்து வீட்டுக்காரனுடன்... வில்லங்க வழக்கு


கரன்ட் கட்! இருட்டில் கணவர் என நினைத்து பக்கத்து வீட்டுக்காரனுடன்... வில்லங்க வழக்கு
x
தினத்தந்தி 26 May 2017 8:58 AM GMT (Updated: 26 May 2017 8:58 AM GMT)

மின்சாரம் இல்லாததால் இருட்டில் கணவர் என நினைத்து பக்கத்து வீட்டுக்காரனுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட பெண்.

மும்பை

மும்பை பொவாய் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை கரன்ட் கட். ஏரியாவே இருளில் மூழ்கியது. நள்ளிரவில் ஒரு வீட்டின் கதவு தட்டப்பட்டது. தூங்கிக்கொண்டிருந்த 26 வயது இளம் பெண் கணவர் கதவை தட்டுகிறார் என்று கதவைத் திறந்தார். விளக்கு வெளிச்சம் இல்லை. பிறகு கொட்டாவி விட்டுக்கொண்டே பெட் ரூம் சென்று படுத்தார். அங்கு வந்த அவர், இளம் பெண்ணைத் தொட்டார். எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

அதற்கு பிறகு  இருவரும் தூங்கி விட்டனர். அதிகாலையில் அவர் எழுந்து பேன்ட் சட்டையை மாட்டும்போது கரன்ட் வந்து விளக்கு எரிந்தது. பெட்டில் படுத்திருந்த அந்தப் பெண், தற்செயலாகத் திரும்பிப்பார்த்தால்,  அதிர்ச்சி பக்கத்தில் நின்றவன் பக்கத்து வீட்டுக்காரன்.அப்போதுதான் தெரிந்தது தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டது பக்கத்து வீட்டுகாரன் என்று.
இதை தொடர்ந்து அந்த் பெண் கத்தி கூப்பாடு போட அக்கம் பக்கத்து வீட்டினர் கூடி பிரச்னையாகிவிட்டது.

பிறகு அந்தப் பெண், ‘இருட்டுல, இவனை என் ஹஸ்பண்ட்டுன்னு நினைச்சுட்டேன்’ என்று கண்ணீர் விட்டார். அந்தப் பெண்ணின் கணவனுக்கு விஷயம் தெரியவர, விவகாரம் பொவாய் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறது.

புகாரில் இந்தக் கதையை அப்படியே விவரித்திருக்கிறார் அந்தப் பெண். இதையடுத்து பாலியல் பலாத்கார புகாரில் பக்கத்து வீட்டுக்கார விஸ்வநாத் என்கிற விஷ்ணுவை (32) கைது செய்து அவர்மீது கற்பழிப்பு வழக்குப்பதிவுசெய்து உள்ளனர். 

Next Story