கற்பழிப்பு தொடர்பாக புகார் கொடுக்க சென்ற பெண்ணிடம் உறவு வைத்து கொள்ள சொன்ன கொடூரம்


கற்பழிப்பு தொடர்பாக புகார் கொடுக்க சென்ற பெண்ணிடம் உறவு வைத்து கொள்ள சொன்ன கொடூரம்
x

கற்பழிப்பு தொடர்பாக புகார் கொடுக்க சென்ற பெண்ணிடம் உறவு வைத்து கொள்ள சொன்ன போலீஸ் அதிகாரியிடம் விசாரணை

ராம்பூர்

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த 37 வயது பெண்  கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தெரிந்த நபர் ஒருவர் அவரது நண்பரும் சேர்ந்து அவரை வீட்டில் விடுவதாக வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்று துப்பாக்கி முனையில் பாலியல் பலாதகாரம் செய்தனர்.

இது குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற போது புகாரை வாங்க அங்கிருந்த சப்- இன்ஸ்பெக்டர் ஜெய் பிரகாஷ் சிங்மறுத்து விட்டார். இதை தொடர்ந்து  பாதிக்கபட்ட பெண்   உள்ளூர்  நீதிமன்றத்தில் மனு செய்தார். கோர்ட் உத்தரவின் பேரில் கடந்த பிப்ரவரி 21ந் தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் அமீர் அகமது ( வயது 55) சத்தார் அகமது( 45 ) ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பாதிகப்பட்டபெண்ணின் வாக்குமூலத்தையும் மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தார்.

பாதிக்கப்பட்ட பெண் கூறும் போது   நான் புகார் கொடுப்பதற்காக எஸ்.ஐ. ஜெய் பிரகாஷ் சிங்கை சந்தித்தபோது, அவர் முதலில் என்னுடன் உறவு வைத்துக்கொள்ள விரும்புவதாக கூறினார். அவர் என்னை மொபைல் போனில் கூட அழைத்தார், தனியாக தனது அறையில் அவரை சந்திக்க வேண்டும் என என்னை அழைத்தார். நான் அவரை  தவிர்த்த போது  பதினைந்து நாட்களுக்கு முன்னால் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அவர் என்னிடம் கற்பழிப்பு காட்சியைப் பற்றியும் மறுபரிசீலனை செய்யக்கூடிய கேள்விகளைப் பற்றியும் கேட்டார். குற்றவாளிகள் கைதானதும் தான் எனது எண்ணம்  நிறைவேறியது இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி சுதா சிங் கூறியதாவது:-

 இந்த விவகாரம் குறித்து கஞ்ச் போலீஸ் நிலைய அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். விரைவில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வார் என கூறினார்.



Next Story