யோகி ஆதித்யநாத்தை கொல்லப்போவதாக டெல்லி போலீசுக்கு தொலைபேசியில் மிரட்டல்
யோகி ஆதித்யநாத்தை கொல்லப்போவதாக டெல்லி போலீசுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி,
உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை கொல்லப்போவதாக டெல்லி போலீஸ் ஒருவரின் தனிப்பட்ட செல்போன் எண்ணில் அழைத்து மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
பிற்பகல் 3 மணியளவில் இந்த அழைப்பும் வந்ததும் பரபரப்பான டெல்லி போலீசார், இது குறித்து உத்தர பிரதேச போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு மிரட்டல் விடுக்கப்பட்டது வெறும் புரளி என்பது தெரியவந்தது. மர்ம தொலைபேசி குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story