முதல் அரசு முறை பயணமாக நாளை லடாக் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்


முதல் அரசு முறை பயணமாக நாளை லடாக் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
x
தினத்தந்தி 20 Aug 2017 10:42 AM GMT (Updated: 20 Aug 2017 10:41 AM GMT)

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதல் அரசு முறை பயணமாக நாளை காஷ்மீர் மாநிலம் லடாக் செல்கிறார்.

புதுடெல்லி,

நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த்  கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் ராம்நாத் கோவிந்த் முதல் அரசு முறை பயணமாக நாளை காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதிக்கு செல்கிறார். ஸ்கவுட் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். லடாக்கில் 5 ராணுவ பிரிவுகளுக்கு மரியாதை அடையாள சின்னங்களை வழங்குகிறார். மேலும் லே மஹாபோதி சர்வதேச தியான மையத்துக்கும் செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி லடாக் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story