இரட்டை குழந்தைகளால் அபசகுணம் என கருதி குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்


இரட்டை குழந்தைகளால் அபசகுணம் என கருதி குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்
x
தினத்தந்தி 20 Aug 2017 2:44 PM GMT (Updated: 20 Aug 2017 2:44 PM GMT)

இரட்டை குழந்தைகளால் அபசகுணம் என கருதி பெற்ற தாயே குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கும்லா,

ஜார்கண்ட் மாநிலம் தம்கா மாவட்டத்தில் பெண் ஒருவர் தனக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளை அபசகுணமாக கருதி தனது வீட்டில் உள்ள கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். பின்னர் இந்த சம்பவத்தை போலீசாருக்கு தெரியாமல் மறைக்க தனது தலைமுடியை கத்தரித்து வீட்டில் சுயநினைவின்றி மயங்கிய நிலையில் காணப்பட்டார்.

இந்த சம்பவம் அறிந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் நன்றாக இருப்பதாக கூறினார்.அதனை தொடர்ந்து போலீசார் விசாரணையில் அந்த பெண் நாடகமாடியது தெரியவந்துள்ளது. அபசகுணமாக கருதி குழந்தைகளை கிணற்றில் வீசியதாக அவர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.

பெற்ற குழந்தைகளையே தாய் கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story