சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க கோரிய வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்


சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க கோரிய வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 13 Oct 2017 5:19 AM GMT (Updated: 13 Oct 2017 5:19 AM GMT)

சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க கோரிய வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது.

புதுடெல்லி,

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்தும், அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிடக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.  

சபரிமலை கோவிலை நிர்வாகம் செய்யும் திருவாங்கூர் தேவசம் போர்டு மற்றும் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலரான பந்தளம் மகாராஜா ஆகியோர் தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பான தங்கள் முடிவை கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று, தனது முடிவை அறிவித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று தெரிவித்துள்ளது.  முன்னதாக இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

Next Story