பா.ஜனதாவுக்கு வாக்களித்த தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் 6 பேர் தகுதிநீக்கம்


பா.ஜனதாவுக்கு வாக்களித்த தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் 6 பேர் தகுதிநீக்கம்
x
தினத்தந்தி 18 Oct 2017 10:40 PM GMT (Updated: 18 Oct 2017 10:40 PM GMT)

மராட்டிய மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி பங்கஜா முண்டேவின் சொந்த மாவட்டமான பீட்டில்,

பீட்,

இந்த ஆண்டு தொடக்கத்தில் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதாவை விட மற்ற கட்சி வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றி பெற்று இருந்தனர்.

பின்னர் மாவட்ட பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றார்.

அவருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 உறுப்பினர்கள் ஓட்டு போட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கட்சி மாறி வாக்களித்த தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் 6 பேருக்கும் எதிராக அந்த கட்சி கலெக்டரிடம் புகார் கொடுத்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அவர்கள் 6 பேரையும் கலெக்டர் அதிரடியாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வெற்றி சான்றிதழ்களையும் உடனடியாக ஒப்படைக்கும்படியும் மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

Next Story