எனது நம்பிக்கையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது: யோகி ஆதித்யநாத் பதிலடி


எனது நம்பிக்கையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது: யோகி ஆதித்யநாத் பதிலடி
x
தினத்தந்தி 19 Oct 2017 7:19 AM GMT (Updated: 19 Oct 2017 7:19 AM GMT)

தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதற்கு விமர்சனம் செய்யப்பட்டதற்கு பதில் அளித்துள்ள யோகி ஆதித்யநாத் எனது நம்பிக்கையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அயோத்தி,

அயோத்தியில் நேற்று தீபாவளி கொண்டாடிய உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் செய்தனர்.  எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தற்கு பதில் அளித்துள்ள யோகி ஆதித்யநாத், எனது நம்பிக்கையை கேள்வி எழுப்பும் உரிமை யாருக்கும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.  

அயோத்தியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த யோகி ஆதித்யநாத் கூறியதாவது:- “ இது எனது தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்த விஷயம். இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் எப்படி தலையீட முடியும். அயோத்தியா வந்ததற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், தீபாவளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் நகரமான இங்கு வருகை தருவர் என்பதால்,  செய்யப்பட்டு இருந்த ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்ய வேண்டி இருந்தது. 

மாநில முதல் மந்திரியாக, இது எனது கடமையாகும். மாநிலத்தின் ஒவ்வொரு இடத்திற்குமான வளர்ச்சியை உறுதி செய்வதில் நான் உறுதியுடன் உள்ளேன்” என்றார். நேற்று அயோத்தியில் உள்ள சராயு நதிக்கரையில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். உத்தர பிரதேச கவர்னர் ராம்நாயக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

Next Story