சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியுடன் உள்ளோம்: பாகிஸ்தான் பிரதமர்
சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் பாகிஸ்தான் உறுதியுடன் உள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இஸ்லமபாத்,
சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் பாகிஸ்தான் உறுதியுடன் உள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கான் அப்பாஸி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையின மக்களாக உள்ள இந்து மதத்தினருக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்த அப்பாஸி, இந்த செய்தியை தெரிவித்தார்.
அப்பாஸி வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில், “ சிறுபான்மையின மக்களின் நலன்கள் மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் பாகிஸ்தான் அரசு உறுதியாக உள்ளது. நபிகளின் புனித கொள்கை, சிறுபான்மையின மக்களின் நலனை பாதுகாக்க எங்களுக்கு வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறது. இந்த தீப திருநாள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டுவர நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். பாகிஸ்தான் மற்றும் உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் மக்களுக்கும் அப்பாஸி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Related Tags :
Next Story