மெர்சலுக்கு பணம் கொடுக்கும் வாய்ப்பு எனக்கு விரைவில் கிடைக்கும் பொன்.ராதா கிருஷ்ணன் கேள்விக்கு சிதம்பரம் பதிலடி
மெர்சலுக்கு பணம் கொடுக்கும் வாய்ப்பு எனக்கு விரைவில் கிடைக்கும் என பொன்.ராதா கிருஷ்ணன் கேள்விக்கு சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை,
அரசின் கொள்கைகளை பாராட்டி மட்டுமே படம் எடுக்க வேண்டும் என சட்டம் வந்தாலும் வரலாம் என பா.சிதம்பரம் டுவிட்டரில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பேசிய மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன் மெர்சல் படத்திற்கு ப.சிதம்பரம் பைனான்ஸ் செய்தாரா? என கேள்வி எழுப்பினார்.
மேலும், உண்மைக்கு புறம்பான விசயங்கள் பரப்புவது தவறு அதுவும் சிங்கபூரையும் இந்தியாவையும் ஒப்பிட்டு பேசுவது ஏற்றுகொள்ள முடியாது என கூறினார்.
இந்நிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்ப்பவர்௧ள் ௭ல்லோரும் மெர்௪லுக்கு பணம் கொடுத்தவர்கள் தான். மெர்சலுக்கு பணம் கொடுக்கும் வாய்ப்பு எனக்கு விரைவில் கிடைக்கும் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story